Sunday, March 9, 2014

முருகா உன் நாமம் ஒன்றே போதும். !


முருகா   உன் நாமம் ஒன்றே போதும். !



வாழ்வில் கவலை மேகங்கள்
சூழ்ந்துவிட்டால் கவலைப்பட்டு
நடுங்காதே

காரிருளிலே ஒளி போல்
கண்ணிமைக்கும் நேரத்திலே
வந்துதவுவான்
கருணை உள்ளம் கொண்ட கந்தன்

ஊரூராய்க் கோயில் கொண்டிருப்பினும்
உள்ளத்திலேயும் உறைந்திருந்து
அருள் செய்வான் நீ உண்மையாய்
அவனை நம்பி வழிபட்டால்.

சொல்லுதற்கு எளிய நாமம்
சொல்லில் அடங்கா வலிமையுடையது
செங்கோட்டு வேலனின் இனிய நாமம்

வேலினால் அசுரர்களை அழித்தவன்
நம் வேதனைகளையும் அதே
வேலினால் தீர்த்திடுவான்
அவனை எதுவும் வேண்டாது
அவன் நாமம் மட்டுமே
அன்போடு நினைத்தால் போதும்.

ஓம் சரவணபவ








2 comments:

  1. "படமும் அழகு.

    நினைத்தபோது நீ வரவேண்டும்... நீலமயில் மேலமர் வேலா..."

    ReplyDelete
  2. // அன்போடு நினைத்தால் போதும்... // அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete