Friday, March 7, 2014

வளம் சேர்க்கும் வள்ளி

வளம் சேர்க்கும் வள்ளி 




வணங்குவோர்  வாழ்வில்
வளம் சேர்க்கும் வள்ளியே

குமரனின் மனத்தைக்
கொள்ளைகொண்ட கள்ளியே

எங்கள் வாழ்வு இனிதாகப் போகும்
எப்போதும் உந்தன்  திருவடியை எண்ணியே

அன்போடும் அருளோடும் அனைவருடனும்
அனுசரித்து வாழ்வோம் உன்னிடம்
பக்தி பண்ணியே

நான் பாமரனாய் இருந்தால் என்ன?
மெத்த படித்தவனாய் இருந்தால் என்ன?
பசித்தோருக்கு பசியாற்றும் மனமும்
துன்புற்றோர்க்கு உதவிக் கரம் நீட்டும்
உள்ளமும்  தந்திடுவாய் அம்மணி

செல்வத்தை சேர்த்து தர்ம சிந்தனையற்று
அகந்தையுடன் அகிலமெங்கும் திரிந்து
வீணே மடியும் மாந்தர்களின்
கூட்டுறவை யான் வேண்டேன்

தன்னிடம் இருப்பதை பகிர்ந்துண்டு
உன் திருவடிகளில் அன்பு செலுத்தி
உன் புகழை பாடி மகிழ்ச்சியுடன்
வலம் வரும் அடியார்களின்
கூட்டுறவையே வேண்டுகிறேன்.  

3 comments:

  1. // தன்னிடம் இருப்பதை பகிர்ந்துண்டு //

    அருமை ஐயா...

    ReplyDelete
  2. வள்ளிக்கென்று தனிக் கோவில் இருக்கிறதா ஸார்? முருகனைக் கொண்டாடுவோம். வள்ளி, தெய்வானையை யாரும் கொண்டாடியதாக நான் அறிந்திருக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. கீழ்கண்ட இணைப்பில் வள்ளியைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

      . http://us5.campaign-archive2.com/?u=44d5f4d1c3077099bace3a138&id=5510360786

      Delete