Sunday, March 9, 2014


அன்பே இறைவன் 





ஆதவன் உதித்தால்
அகிலம் முழுவதும்
ஒளி வெள்ளம் பரவும்

மாதவன் நாமத்தைக் கொண்டு துதித்தால்
மனதில் ஆனந்த வெள்ளம் பாயும்

அழியும் பொருளைத் தேடும் மனம்
அழியாப் பரம்பொருளை தேடினால்
உள்ளமெல்லாம் அருளானந்தம் நிறையும்

நாணினால் செலுத்தப்படும் அம்பு இலக்கில்
உள்ள உயிரை மட்டுமே  கொல்லும்

நாவினால் செலுத்தப்படும்
விஷ அம்புகளைப் போன்ற கொடிய
சொல்லம்பு சொல்லொணா கொடுமைகளைச் செய்து
பல உயிர்களைக் பலி வாங்கிவிடும்

இனிய சொற்களைச் சொல்ல நாவைப்
பழக்கவேண்டும் அனைவரின் இதயத்தில்
இடம்பெற சொல்லிலும் செயலிலும்
அன்பைக் கடைபிடிப்போம்

அன்பே வடிவான இறைவனை எந்நேரமும்
நினைத்தாலே போதும்  இவ்வுலக
வாழ்வு இன்பமயமாகும் 

2 comments:

  1. உண்மை... உண்மை... உண்மை ஐயா...

    ReplyDelete
  2. மாதவன் நாமம் சொன்னால் மனதில் ஆன்மீக ஒளி பரவும்.

    ReplyDelete