Thursday, June 6, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (56)

தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள் (56)

இராமா எனக்கு 
நீ ஞானம் அளிக்கலாகாதா?

(கீர்த்தனை (408)-ஞான மொசக-ராதா  -ராகம்-ஷட்வித-மார்கிணி-மேள-46-தாளம் ரூபகம் .)

இராமா எனக்கு
நீ ஞானம் அளிக்கலாகாதா?






வேதாத்மாவாகிய கருடனை
வாகனமாக உடையவனே!

என்னுடன் வாதமா?

உனது நாம சங்கீர்த்தனத்தின்
மூலம் என் சித்தம்
களங்கமற்றதாக  ஆயிற்று.

ஆகவே பரமாத்மா ,ஜீவாத்மா,
பதினான்கு உலகங்கள் மனிதர்,
கின்னரர், கிம்புருடர் ,நாரதர் ,
போன்ற முனிவர்கள் ஆகிய
அனைத்தும் நானே என்ற
அத்வைத ஞானத்தை
அருளலாகாதா?

நிறைவு கொண்டவனே !
களங்கமற்றவனே!

எல்லையற்ற
ஆனந்தமளிப்பவனே!

Pic-courtesy-google images.

4 comments:

  1. பரமாத்மா, ஜீவாத்மா, பதினான்கு உலகங்கள், மனிதர், கின்னரர், கிம்புருடர், நாரதர்...

    விளக்கம் அருமை ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. //ஆகவே பரமாத்மா ,ஜீவாத்மா,
    பதினான்கு உலகங்கள் மனிதர்,
    கின்னரர், கிம்புருடர் ,நாரதர் ,
    போன்ற முனிவர்கள் ஆகிய
    அனைத்தும் நானே என்ற
    அத்வைத ஞானத்தை
    அருளலாகாதா?//

    சிறிய பதிவில் சிறப்பான கோரிக்கைகள். அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. கோரிக்கைகள். அருமை
    பாராட்டு அருமை VGK

    ReplyDelete