Sunday, June 23, 2013

முருகா உன் நாமம் வாழ்க

முருகா உன் நாமம் வாழ்க 























அழகென்ற சொல்லுக்கு முருகா
உன் அழகின்றி உலகிலே
பொருளேது முருகா

ஞானக்கனியாம்உனக்கு
மாங்கனி கிடைக்காமையினால்
கயிலைமலையிலிருந்து
எம் போன்ற பக்தர்களுக்காக
தணிகை மலையில்
வந்து நின்று அருள் செய்த முருகா

வேலை வணங்குவதே
எங்கள் வேலை என்றுணர்த்தவே
கையில் வேலை தாங்கி எங்கள் முன்
நின்றனையோ  முருகா

ஐம்புலனும் அறிவும் ,உடலின்கண்
விளங்கும் ஆறாதார சக்திகளுமாய்
நீ விளங்குவதை உணர்த்தும் வகையில்
ஆறுமுகம் கொண்டு காட்சி
தந்தனையோ முருகா

பல்வேறு கோலம் கொண்டு
அறு படை வீடுதன்னில்
வள்ளி தெய்வானையுடன்
காட்சி தரும் முருகா
வாழும் காலமெல்லாம்
உன் நினைவோடு
வாழ அருள் புரிவாய்.

முக்திக்கு வித்தான கந்தா
சக்தியின் வேல் தரித்த வேலா
துன்பம் துடைக்கும் தூயவா
வெற்றியை தரும் விமலா
என்றென்றும் என் நாவில்
நடமாடட்டும் உன் நாமம்

6 comments:

  1. வரிகள் அற்புதம்...

    படம் மிகவும் அருமை... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. படமும் பதிவும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கள். அருமை.

      Delete
  3. ஞானக்கனியாம்
    முருக்கனியின் பாடல் அருமை..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. English translation of the song done by Mr. V.S.Krishnan.
    Thanks Mr. Krishnan.

    அழகென்ற சொல்லுக்கு முருகா
    உன் அழகின்றி உலகிலே
    பொருளேது முருகா

    The word Muruga symbolises beauty
    There is no greater truth that pervades the universe
    than music

    ஞானக்கனியாம்உனக்கு
    மாங்கனி கிடைக்காமையினால்
    கயிலைமலையிலிருந்து
    எம் போன்ற பக்தர்களுக்காக
    தணிகை மலையில்
    வந்து நின்று அருள் செய்த முருகா

    Oh Murua, as you were denied of the fruit of knowledge
    you came all the way from the mountain of Kailash
    and chosen your abode at Thanigai mountain
    to bestow your grace to devotees like me

    வேலை வணங்குவதே
    எங்கள் வேலை என்றுணர்த்தவே
    கையில் வேலை தாங்கி எங்கள் முன்
    நின்றனையோ முருகா

    You wanted to teach us that
    worshipping Vel is our work
    that is why you appeared before us with Vel,
    the Vel which is synonimous with work.

    ஐம்புலனும் அறிவும் ,உடலின்கண்
    விளங்கும் ஆறாதார சக்திகளுமாய்
    நீ விளங்குவதை உணர்த்தும் வகையில்
    ஆறுமுகம் கொண்டு காட்சி
    தந்தனையோ முருகா

    Oh Muruga you appeared with six sacred faces
    .to drive home the point that
    you symbolises the five senses and the inside vision

    பல்வேறு கோலம் கொண்டு
    அறு படை வீடுதன்னில்
    வள்ளி தெய்வானையுடன்
    காட்சி தரும் முருகா
    வாழும் காலமெல்லாம்
    உன் நினைவோடு
    வாழ அருள் புரிவாய்.

    Oh murua, who appear in different forms
    at your six sacred abodes
    Bless us to recite your name
    all through our life

    முக்திக்கு வித்தான கந்தா
    சக்தியின் வேல் தரித்த வேலா
    துன்பம் துடைக்கும் தூயவா
    வெற்றியை தரும் விமலா
    என்றென்றும் என் நாவில்
    நடமாடட்டும் உன் நாமம்

    Oh Kanda, who is the seed of liberation
    who holds the Vel that symbolises power
    who removes all sorrows and miseries
    who brings victory to all
    May your name ever remain in my tongue

    ReplyDelete