Sunday, June 30, 2013

ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடல்கள்.

ஊத்துக்காடு  வேங்கடசுப்பையர்  
பாடல்கள். 

















ராகம் : காம்போதி
தாளம் : ஆதி

பல்லவி

குழலூதி  மனமெல்லாம்
கொள்ளைகொண்டபின்னும்
குறையேதும்  எனக்கேதடி  சகியே

சரணம்

1.(மிக  மிக ) அழகான  மயிலாடவும்
காற்றில்  அசைந்தாடும்  கொடிபோலவும்
அகமகிழ்ந்திலவும்
நிலவொளி  தனிலே
தனைமறந்து  புள்ளினம்  கூவ
அசைந்தாடி  மிக  இசைந்தோடி
வரும்  நலம்  காண
ஒரு  மனம்  நாட
தகுமிகு  என  ஒரு  பதம்  பாட
தகிட  ததிமி  என  நடமாட

கன்று  பசுவினமும்  நின்று
புடைசூழ  என்றும்  மலருமுக
இறைவன்  கனிவோடு  (குழலூதி )

2.(கண்ணன் ) மகர  குண்டலமாடவும்
அதற்கு  ஏற்ப  மகுடம்  ஒளிவீசவும்
மிகவும்  எழிலாகவும்  (தென்றல் )
காற்றில்  மிளிரும்  துகிலாடவும்

இந்த இனிமையான  பாடலை பாடாத
இசைக்கலைஞர் இல்லை என்றே சொல்லலாம்.

5 comments:

  1. நல்ல பாடல். நல்ல பதிவு. பாராட்டுக்கள். நன்றிகள்.

    ReplyDelete
  2. இந்த பாடலை மகாராஜபுரம் ஸ்ரீ சந்தானம் அவர்கள் பாடியது என்னிடம் உள்ளது.தங்கள் emai முகவரி தந்தால் அனுப்பித்தருகிறேன். மிக்க நன்றி

    ReplyDelete