Monday, June 24, 2013

மாதா அம்ருதானந்தமயி

மாதா அம்ருதானந்தமயி








அம்மா !
உன் புன்னகை  பூத்த
தெய்வீக முகம்
புண்பட்ட மனங்களின்
காயங்களை ஆற்றும்

மனித குலத்திற்கு
நீ ஆற்றும் புனித
பணிக்கு அனைவரையும்
உன்னிடம் கொண்டு சேர்க்கும்

அகில உலக
மக்களையும் அரவணைத்து
காக்கும் அன்னையே
அடிபணிந்தோம் உன் பாதம்

6 comments:

  1. படமும் பாடலும் நல்லாயிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அன்னையை நேரில்
      தரிசித்துள்ளீர்களா?
      தரிசித்திருந்தால் அந்த
      தெய்வீக புன்னகையை
      நேரில் கண்டிருக்கலாம்

      Delete
    2. இல்லை அண்ணா. இதுவரை இல்லை.

      ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளைத்தவிர வேறு யாரையும் நான் இதுவரை விருப்பத்துடன் தரிஸித்தது இல்லை.

      ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இன்றும் என்னுடன் இருந்துகொண்டு என்னை ரக்ஷித்து வருவதாக நான் நினைத்துக்கொண்டு இருப்பதால், மற்றவர்களைப்போய் தரிஸிக்க நான் துளியாவது முயற்சிப்பதும் இல்லை.

      தாங்கள் கேட்டுள்ளதால் மட்டும் சொல்லியுள்ளேன். தவறாக இருப்பின் மன்னித்துக்கொள்ளவும்.

      Delete
    3. மீண்டும் சொல்கிறேன்
      நான் யார் உங்களை மன்னிப்பதற்கு?
      இறைவன் விருப்பு வெறுப்பற்றவன்
      அவன் தரிசனம் பெற நாம் விருப்பு வெறுப்பற்று
      அனைத்துயிரின் மீதும் அன்பு செய்ய கற்றுக்கொண்டால்தான்
      அவனருள் கிடைக்கும்

      Delete
  2. என்னவொரு மகிழ்ச்சியான படம்...!

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. பல ஆண்டுகளுக்கு முன்பு
      அன்னையை தரிசித்தேன்

      என் உள்ளத்தில்அன்று
      குடி கொண்ட அவளை நினைத்தால்
      போதும் கவலை மேகங்கள்
      கரைந்துபோகும்.

      அந்த தெய்வீக முகத்தில் தோன்றும்
      புன்னகையைதான் இன்று
      வரைந்து பதிவிட்டேன்.

      Delete