Sunday, June 9, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(61)

தியாகராஜ  சுவாமிகளின் 
சிந்தனைகள்(61)






மங்களம் தருவதும்
சத்வ குணம் நிறைந்ததுமான
ராம பக்தியை எனக்கு
பிட்ஷையாய் அருள்வாய் !

கீர்த்தனை(315)-பக்தி பிட்ஷ மீயவே--(ராகம்-சங்கராபரணம்-தாளம்-ரூபகம்.)

மங்களம் தருவதும்
சத்வ குணம் நிறைந்ததுமான
ராம பக்தியை எனக்கு
பிட்ஷையாய் அருள்வாய் !

அதுவே முக்தியையும்
சகலசக்திகளையும்
திரிமூர்த்திகளையும்   காட்டிலும்
மேன்மை வாய்ந்தது

அத்தகைய பக்தி இல்லாவிடில் பிணத்திற்கு
பொன்மயமான தலைப்பாகை சாற்றி
மார்பில் வைர நகைகளை அணிவிபதுபோல்
துணிவும், கபடமும் நிறைந்த  ஸ்திரிகளுக்கு
புராணம், ஆகமம், சாத்திரம், வேதம், ஜபம்
முதலியவற்றைக் குறித்து பிரசங்கம்
செய்யும் சக்தியை அளித்து என்ன பயன்?

மிக அருமையான கீர்த்தனை
இராம பக்தன் ராம பக்தியை தவிர  வேறு எதையும் 
இறைவனிடம் யாசிக்க கூடாது. 
என்பதை வலியுறுத்தும் பாடல். 

pic-courtesy-google images 

6 comments:

  1. //மங்களம் தருவதும் சத்வ குணம் நிறைந்ததுமான ராம பக்தியை எனக்கு பிட்ஷையாய் அருள்வாய் !//

    அருமையான பிரார்த்தனை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. அத்தகைய பக்தி இல்லாவிடில் .............

    துணிவும், கபடமும் நிறைந்த ஸ்திரிகளுக்குப்

    புராணம், ஆகமம், சாத்திரம், வேதம், ஜபம் முதலியவற்றைக் குறித்து பிரசங்கம் செய்யும் சக்தியை அளித்து என்ன பயன்?

    அடாடா ! இப்படியெல்லாம் கூட உதாரணம் சொல்லியிருகிறாரா, தியாகராஜ ஸ்வாமிகள் ? !!!!!!

    ReplyDelete
    Replies
    1. எதிர்காலத்தில் ஸ்திரீகள்
      பிரவசனம் செய்ய வருவார்கள்
      என்பதை அன்றே உணர்ந்து அதை
      தன் கீர்த்தனையில்
      குறிப்பிட்டிருக்கிறார் ஸ்வாமிகள்.

      Delete
  3. அருமையான கீர்த்தனை... விளக்கத்திற்கு நன்றி ஐயா...

    ReplyDelete