Saturday, June 22, 2013

இனியும் திருந்தாவிடில்....

இனியும் திருந்தாவிடில்....




























நன்றி கெட்ட மாந்தர்களே 
இனி உங்களுக்கு அழிவுதான்!

புண்ணிய பூமியாம் பாரதத்தில்
வாழும் புவி மாது நான் 

நீங்கள் வாழ உடல் தந்தேன் 
உடலில் உயிர் தங்க காற்று தந்தேன்
சுவையான  நீர் தந்தேன், உணவு தந்தேன், 
இனிக்கும் கனிகள் தந்தேன் 
மணக்கும் மலர்கள் தந்தேன் 
அனைத்தும் இலவசமாய். 

என்தங்கை  ஸ்ரீதேவியோ 
அஷ்டர்வையங்களையும் 
தந்தாள் நீங்கள் மகிழ்வோடு வாழ
அனைத்தையும் இலவசமாய்.  

மாலவனோ மலைமீது நின்று கொண்டு 
கண்ணிமைபோல் காக்கின்றான் 
உங்களை இவ்வுலகில் வாழும் காலம் வரை. 
தன்னை பயன் ஏதும் எதிர்பாராது 
வழிபடுபவருக்கு முக்தியும் தருகின்றான் 

ஆனால் நன்றி கெட்ட மனித குலமே
அகந்தையின் உச்ச கட்டத்தில் 
இறைவனே இல்லை என்றும். 
நீங்கள் பிதற்றும் பேச்சையும் 
சுயநலம் கொண்டு பிறர் சொத்தை 
அபகரிக்கும் உங்கள் செயலையும் 
இனிமேலும் நாங்கள் அனுமதியோம். 

இனி உங்கள் அழிவு காலம்தான்
வெள்ளமென வருவோம்,புயலாய் வீசுவோம்
அனலென காய்வோம்,ஆழி பொங்கி 
அனைத்தையும் விழுங்குவோம். 
இனியும் திருந்தாவிடில். 

5 comments:

  1. சிறிது கோபமாகத் தான் உள்ளது ஐயா...!

    ReplyDelete
  2. //இனியும் திருந்தாவிடில்....//

    அடடா, என்ன அண்ணா .... இப்படியா பயமுறுத்துவது?

    பதிவுக்குப்பாராட்டுக்கள். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தவறு செய்பவர்களுக்கு
      மட்டும்தான் இந்த எச்சரிக்கை

      Delete
    2. பேரன்புடையீர்,
      நமஸ்காரங்கள்.
      தங்களது எழுத்துக்களில் உள்ள தார்மீக ஆதங்கம் மனதைச் சுடுகிறது.
      ஆனாலும் நேர்மறையாகவே சுட்டிக்காட்டி நமது சமுதாயத்தை பண்படுத்த முயற்சிப்போம்.
      எனது எண்ணங்களில் தவறு இருக்குமானால் மன்னிக்கவும்.
      வணக்கங்கள்
      ரமேசன் விஸ்வநாதன்

      தங்கள் மேலான
      கருத்துக்களுக்கு நன்றி
      இவனாக எதையும் எழுதுவதில்லை


      இவனின் பதில்

      நேற்று இரவு முழுவதும்
      இவன் மண்டையில் ஏற்பட்ட
      குடைச்சல்களே இவனை
      இவ்வாறு எழுத தூண்டியது.

      புவி மாதா தன்னை காப்பாற்றிக்கொள்ள
      ஒவ்வொரு முறையும் ஸ்ரீமான் நாராயணனிடம்
      முறையிட முடியாது.

      எனவே இது போன்ற அறுவை சிகிச்சைகளை
      அவள் அவ்வப்போது செய்துகொண்டுதான் இருப்பாள்.

      ஆனால் மனிதர்கள்
      பாடங்களை கற்றுக்கொள்வதில்லை.

      மாறாக இன்னும் ஆணவம் பிடித்து
      இந்த பூமியை, காற்றை, நீரை, நிலத்தை,
      நெருப்பை மாசு படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்
      .
      என்ன செய்ய?


      Delete