Thursday, June 13, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(73)

தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(73)






இராமா
கலியுக மாந்தருக்கு 
உன் மகிமையை விவரித்து பயனில்லை 

கீர்த்தனை(248)-கலிநருலகு  மஹிமலு
ராகம்-குந்தலவராளி(மேள-28)-தாளம்-தேசாதி 

இவ்வுலகில் திரியும் எருதுகளுக்கு
அவலின் ருசி தெரியாததுபோல்
இக்கலியுக மாந்தருக்கு உன் மகிமையை
விவரித்து பயனில்லைஎன்று
நான் கூறவில்லையா?

மனைவி மக்களுக்காகவும் ,
செல்வத்திற்க்காகவும், பெயர்,புகழ்
முதலியவற்றுக்கும்
பெரியதனத்திற்க்காகவும்
சதா பக்த வேஷம் போட்டு
நடிப்பவர்களுக்கு
உன் மகிமையைக் கூறி
பயனில்லை
பிறவிக்கடலை
தாண்டுவிக்கும் பெயரை
உடையவனே!

நல்ல பொருள் பொதிந்த கீர்த்தனை.

இந்த உலகில் யார் ராம நாமத்தை 
பற்றி கவலைப்படுகிறார்கள்?

காலையில் எழுந்ததுமுதல் இரவு 
அவர்களே அறியாமல் உறங்க செல்லும் வரை 
உலக விஷயங்களிலேயே மூழ்கி கிடக்கின்றனர்.

எப்போதும் பிறர் முன் நடிப்பதையே
தொழிலாக கொண்டுள்ளனர். 
அதுபோல் பிறர் நடிப்பதையே எந்நேரமும் 
பார்த்துக்கொண்டு வாழ்நாளை 
வீனாக்கிகொண்டிருக்கின்றனர். 

அதனால் அவர்களுக்கு இராம நாமத்தை 
பற்றி சொல்வதெல்லாம் 
விழலுக்கு இரைத்த நீர்.

அந்த நீரில் பக்தி பயிர் வளராது 
வெறும் களைகள்தான் வளரும்.

அதை காம குரோதம்,மோகம், மதம்
 என்னும் எருமை மாடுகள்தான் 
மேய்ந்து தின்று கொழுக்கும்
 மனிதர்களைப்போல் 

எனவேதான் சிவபெருமான் காசியில் 
இறக்கும் மனிதர்களுக்கு மட்டும் 
உயிர் பிரியும்போது ராம நாமத்தை 
ஓதுகிறான் போலும். 

ஏனென்றால் அந்த நேரத்திலாவது 
அவர்கள் உலக விஷயங்களை 
மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையினால்.

அடுத்த பிறவியிலாவது ராம நாமத்தை 
சொல்லி உய்யட்டும் என்ற 
நல்ல எண்ணத்தினால்.  

3 comments:

  1. என்ன ஐயா இப்படி சொல்லி விட்டீர்கள்... இப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்காக தானே...?

    ReplyDelete
    Replies
    1. உண்மை அதுதானே

      இன்று எல்லோரும்
      பொய் பேசுகிறார்கள்.

      யாரும் யாருக்கும்
      உண்மையாக இல்லை.

      பொய் பேசினால்
      நடித்துதான் ஆக வேண்டும்.

      இன்று தொலை காட்சிகளில்
      பிறர் நடிப்பதைதான் அனைவரும்
      விழித்திருக்கும் நேரம் முழுவதும்
      பார்த்ததையே பார்த்து பயித்தியம்
      பிடித்து அலைகின்றனர்.

      Delete
  2. //காலையில் எழுந்ததுமுதல் இரவு அவர்களே அறியாமல் உறங்க செல்லும் வரை உலக விஷயங்களிலேயே மூழ்கி கிடக்கின்றனர்.

    எப்போதும் பிறர் முன் நடிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர். அதுபோல் பிறர் நடிப்பதையே எந்நேரமும் பார்த்துக்கொண்டு வாழ்நாளை
    வீணாக்கி கொண்டிருக்கின்றனர்.//

    மனிதர்களை சரியாக, மிகச்சரியாகப் புரிந்துகொண்டு சொல்லியிருக்கிறார், தியாகராஜ ஸ்வாமிகள். ;))))) பகிர்வுக்கு நன்றிகள்..


    ReplyDelete