Tuesday, June 11, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(67)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(67)








இவ்வுலகில் மனிதராகப் 
பிறந்ததற்கு இராம நாமத்தை 
நினைப்பதே இன்பமாகும்

கீர்த்தனை (348)-ச்மரணே சுகமு ராம நாம 
ராகம்-ஜனரஞ்சனி-தாளம்-தேசாதி 

இவ்வுலகில் மானிடராகப் பிறந்ததற்கு
இராம நாமத்தை நினைப்பதே இன்பமாகும்

சிறந்த ராஜயோக
நிஷ்டையிலிருப்பவர்களுக்கு
ஆனந்தமளிப்பது அது

இராமநாமத்தை சரவணம்
செய்வதன் மூலம் அப்பெயருக்கு
உரியதான வடிவம் நமது
இதயத்தை நிரப்பி மனத்தில்
பக்தி பிறக்குமாறு செய்யவில்லையா?

பற்றற்ற தியாகராஜன் செய்யும்
இராம நாம ஸ்மரணமே
இன்பம் தருவது?

இது சுவாமிகளின் அனுபவம். 

ஆனால் இந்த உலக மாந்தர்கள் 
இராம நாமத்தை தவிர அனைத்து
நாமாக்களையும் அல்லும் பகலும் 
நினைத்து அல்லல்கள் நீங்காமல் 
வருத்தத்தில் மூழ்கியுள்ளனர் 
என்ன செய்ய ?

இந்த உலகமக்கள் இன்பத்தை
எங்கேயோ,எதிலேயோ தேடி 
வாழ்நாள் முழுவதும் 
அலைந்துகொண்டிருக்கின்றனர். 

இராம நாமத்தை நினைக்க 
புண்ணியம் செய்திருக்க 
வேண்டுமல்லவா ?

முற்பிறவியிலும் செய்யவில்லை
இந்த பிறவியிலும் அதை பற்றி 
சிந்தனையில்லை. 
எப்படி கடைத்தேறுவது ?





6 comments:

  1. //முற்பிறவியிலும் செய்யவில்லை இந்த பிறவியிலும் அதை பற்றி சிந்தனையில்லை. எப்படி கடைத்தேறுவது ?//

    ;((((( கஷ்டம்தான்.

    //இவ்வுலகில் மானிடராகப் பிறந்ததற்கு இராம நாமத்தை நினைப்பதே இன்பமாகும்//

    சரியாகச் சொன்னீர்கள். மானிட ஜன்மத்தின் மூலம் தான் சுலபமாக இறவனை அடைய முடியும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. மா-பெரிய
      நி-நிறைய
      இடர்-துன்பங்கள்

      மானிடர்கள் (இடர்களை)துன்பங்கள் அனுபவிக்கிறார்கள்.
      இடையிடையே இடைவேளைபோல்
      இன்பங்களையும் அனுபவிக்கிறார்கள்.

      மாலவனை நினைத்தால்
      மாயை விலகும்.
      ஆனால் மாயையே
      மனிதர்கள் ஆராதிக்கிறார்கள்.
      என்ன செய்ய?

      Delete
  2. //ஆனால் இந்த உலக மாந்தர்கள் இராம நாமத்தை தவிர அனைத்து நாமாக்களையும் அல்லும் பகலும் நினைத்து அல்லல்கள் நீங்காமல் வருத்தத்தில் மூழ்கியுள்ளனர்
    என்ன செய்ய ?//

    *அனைத்து நாமாக்கள்*

    ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல!

    ஏராளமான தொந்தரவுகள் உள்ளன. என்ன செய்வது?

    சிந்திக்க வைக்கும் நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது?
      இராம நாமத்தை
      நினைப்பதே இன்பம்

      Delete
  3. சிந்திக்க வேண்டிய கருத்துரைகளும் கூட...

    ReplyDelete
    Replies
    1. சிந்திப்போம்
      செயல்படுவோம்
      பிறரை நிந்திப்பதை
      விட்டொழிப்போம்

      Delete