Thursday, June 6, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(57)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(57)

















இராமா என் மனதில் போக்கை 
அறியும்  தெய்வம் நீ ஒருவனே அல்லவா?

கீர்த்தனை(424)-வத்த நேவாரு லேரு-ராகம்-ஷண்முகப்ரிய(மேள-56)-தாளம்-ஆதி 

கண்ணாடியையொத்த
உன் திருமுகத்தைக்
காண வேண்டுமென்று
நான் எந்நேரமும்
முறையிடுவதைப் பார்த்து
"அங்கலாய்க்க வேண்டாம் "
என்று கூறுவதற்கு
உன்னை தவிர
ஒருவரும் இலர்.

இகத்திலும் பரத்திலும் ஒருவித
விருப்பமும் சிறிதும் இல்லாத
என் மனத்தின்
போக்கை அறியும் தெய்வம்
நீ ஒருவனே அல்லவா?

தியாகராஜனின் இதயத்திற்கு
அணியானவனே!
என்னை வருந்த வேண்டாமேன்று
கூறுவதற்கு உன்னையன்றி
வேறு ஒருவருமிலர்.

உண்மை பக்தனின் மனம் 
எப்போதும் காந்த ஊசி
முனை எப்போதும் 
வடக்கு தெற்கு திசையையே 
நோக்கி நிற்பதுபோல் 
இறைவன் மீதே 
நாட்டம் கொண்டிருக்கும் .

அதுபோல் ஸ்ரீராமனின் 
திருமுகத்தை காணவேண்டும் 
என்று நினைத்துக்கொண்டிருக்கும் விருப்பத்தை 
அந்த ராமனே அறிவான் .

அவனால்தான் அந்த தாபத்தை 
தீர்க்கமுடியும் என்றும் உலகில் மற்றவர்களாலோ 
அல்லது வேறு ஏதாவது பொருளாலோ 
அந்த தாபம் தீராது என்று பொருள். 

2 comments:

  1. /// உண்மை பக்தனின் மனம் எப்போதும் காந்த ஊசிமுனை ///

    அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete